நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவர் மர்ஹும்.அல்ஹாஜ் மெளலவி.ஏ.எல்.இமாம்(பலாஹி) ஹஸ்ரத் அவர்கள் வபாத்தாகி இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைகின்றது.
மர்ஹும் அஷ்ஷெய்க்
இமாம் என்ற ஆளுமை மிக்க தலைமையின் மறைவு நிந்தவூரில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
13-11-2024
-அல்ஹாபிழ்.மெளலவி
எ.பீ.எம்.ஷிம்லி(நஹ்ழி)-
நிந்தவூர் மண்னின் மூத்த ஆலீம்களில் ஒருவர் ஒரு சிறந்த பண்பாளனை நிந்தவூர் மண் இழந்து இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றது.
நிந்தவூரின் மிகச் சிறந்த ஆளுமைகளில் மர்ஹும் ஏ.எல். இமாம் (பலாஹி) அவர்களது வாழ்வில் புரட்டப்பட வேண்டிய பல பக்கங்கள் உன்டு.
அந்நார் இவ்வுலகில் வாழ்ந்த காலப் பகுதியில் மலர்ந்த முகம், அன்பு நிறைந்த பார்வை, சமுகம் மீதான மாறா அக்கறை, மார்க்கத்தில் அதீத ஈடுபாடு, தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்கள்.
மர்ஹும் இமாம் ஹசரத் அவர்கள் சிறிய வயதிலிருந்தே சமுக சேவைகளில் ஈடுபாடு காட்டியதோடு,தமது மார்க்க கல்வியினை காத்தாங்கூடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் நிறைவு செய்த பின்னர் இளைஞர்களோடு இணைந்து நஸ்றுள் இஸ்லாம் எனும் அமைப்பை தோற்றிவித்தார்.
இவரது சமுகப் பணிகளால் கவரப்பட்ட மர்ஹும் அமீர் மேர்ஸா அவர்கள் இவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு ஊர் ரீதியான அனைத்து செயற்பாடுகளிலும் இமாம் ஹஸ்ரத் அவர்களை முன்னிலைப் படுத்தி சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொன்டார்கள்.
மர்ஹும் அமீர் மேர்ஸா அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிந்தவூர் பெரிய ஜூம்ஆ பள்ளி வாசலின் மீள் நிர்மானம்,நிந்தவூர் காஷிபுல் உலும் அரபுக் கல்லூரியின் தோற்றம், சக்காத் சபை அமைப்பு, சக்காத் கிராமம் உருவாக்கம், மற்றும் சமுக சீர்திருத்த பணிகளில் ஹஸ்றத் அவர்கள் முன்னின்று செயற்பட்டார்கள்.
பின்னர் ஊரில் சமூகம் சார்ந்த பல தேவைகள் கானப் பட்டதால் 2018ம் ஆண்டு அல் பஷாயிர் என்ற சமூக சேவை அமைப்பினை அமைத்து நிந்தவூர் மற்றும் ஏனைய வெளியூர் பிரதேசங்களில் உலர் உணவு, புத்தாடை, மற்றும் வறிய மக்களுக்கான வாழ்வாதாரம் போன்ற தன்னலமற்ற சமூகப் சேவைகளை தொடர்ந்தும் செய்து வந்தார்கள்.
மேலும் ஊரிலுள்ள சமுக சேவை அமைப்புக்களை ஒருமித்து செயற்படச் செய்ய வேண்டும் என்ற முயற்சியிலும் உறுதிப்பாட்டிலும் மிக நீண்ட காலமாக ஈடுபட வந்தார்.
இந்நோக்கில் உருவாக்கப்பட்ட நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் உப தலைவராகவ
பணியாற்றி வந்ததோடு இமாம் ஹசரத் அவர்கள் கட்டளையிடுபவராக இல்லாது கழத்தில் இறங்கி செயற்படும் ஒரு கழப்பணியாளராகவே தன்னை அற்பனித்து செயற்பட்டார்.
வெள்ளம், சுனாமி போன்ற அனர்த்தங்களில் போது மக்கள் துயர் துடைக்க இவராற்றிய பணிகள் மறக்க முடியாதவையாகும்.
நிந்தவூர் பற்றின் காழியாராக ஆறாண்டுகள் சிறப்பாக பணியாற்றியதோடு, தன்னிடம் கொண்டு வரப்படும் பிணக்குகளை சமுகக் கண்கொண்டு நோக்கி மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கினார்.
நிந்தவூர் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவராக பொறுப்பேற்று
தனது வீடு துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்ட போதும், சில பொறாமைவாதிகளின் நெருக்குவராங்களுக்கு இடையேயும் துணிவுடன் பணியாற்றினார்.
அமீர் மேர்ஸாவிற்குப் பின்வந்த சிறந்த தலைவர் என்ற பெயரினைப் பெற்றுக் கொண்ட ஹஸ்றத் அவர்கள் தான் கற்ற அறிவு மற்றவரிடையேயும் மலர வேண்டும் என ஆசைப்பட்டார்.
அதன் வெளிப்பாடாக நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மேல் மாடியில் இயங்கிய தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் ஆசானாக, தற்போது இயங்கிக் கொன்டிருக்கும் தாருல் உலூம் அல்குர்ஆன் மனனக் கலாபீடத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும்,
பின்னர் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் நிர்வாக தலைவராக சிறப்பாக செயற்பட்டு மிக நீண்ட நாட்களுக்குப் பின் இக்கல்லூரியில் மிக பிரமான்டமான பட்டமளிப்பு விழாவொன்றினை நடாத்திய ஒரு ஆளுமை மிக்க ஒருவராக திகழ்ந்தார்.
இன்னும் மர்ஹும் மக்கீன் ஹாஜி போன்றவர்களோடு இணைந்து மினன் பள்ளிவாசலில் நிந்தவூரின் முதலாவது ஹிப்ழ் மத்ரஸாவைத் தோற்றுவித்தோடு, இம்மத்ரசாவானது பிற் பட்ட காலங்களில் ஜூம்ஆ பள்ளிவாசலிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக, உப தலைவராக துடிப்புடன் செயற்பட்டதோடு, இறுதியாக அதன் தஃவா குழுவின் தலைவராக இருந்து நூர்ந்து போயிருந்த செயற்பாடுகளுக்கு உத்வேகம் ஊட்டி தஃவா ரீதியான பல நிகழ்வுகளையும் முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டார்.
இமாம் ஹசரத் தெளிந்த எழுத்தாற்றலும், கம்பீரமான பேச்சாற்றலுமுடையவராக காணப்பட்டதோடு, இவரது எழுத்துக்களும் பேச்சுக்களும்,சமுதாயம் மீதான அக்கறையும், ஊர்மீதான பற்றையும் காண்பித்து வைத்தன.
குறிப்பாக எச் சந்தர்ப்பத்திலும் இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள், மாறுபடாமல் இறுதி வரைக்கும் சுய கெளரவத்துடன் தனது கொள்கையில் உறுதியாக வாழ்ந்தார்.
அதேபோல் தனிப்பட்ட கொள்கை ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களை இவர் மதித்து வாழ்ந்தோடு, தனது அரசியல்,ஏனைய அமைப்புக்கள் விடயத்தில் அவர் கருத்துக்கு மாற்றமானவர்கள் இருந்த போதிலும்,ஊர் என்று வரும்போது எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் அவரிடமிருந்த பண்பாடுகளில் விஷேட அம்சமாகும்.
இன்னும் தான் வகித்த பதிவிகளில் போட்டித் தன்மை வரும் போது உடன் அப்பதவியினை விட்டுக் கொடுத்து தனது உயர் பண்பினை கான்பித்தார்.
எப்போதும் மார்க்க சீரழிவுகள், சமுக அவலங்கள் குறித்து அதீத கவலையுடன் இருந்ததோடு,இவற்றை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவா கொள்வார்.
இளைஞர்களை இதன்பால் ஈர்ப்பதற்கு எப்போதும் முயற்சி செய்வதோடு,சமுக அக்கறை, தைரியம், உறுதிப்பாடு, களத்தில் இறங்கி செயற்படும் தன்மை, பக்குவம், எளிமை போன்ற அரிய தலைமைத்துவப் பண்புகளை கொண்ட இவரை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் அடுத்த தலைவராக மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பலரும் முயற்சி செய்தனர்.
இவ்வாறு தனது இறுதிக் காலத்தில் தனிப்பட்ட உடலியல் ரீதியாகவும்,
ஒரு சிலரின் கெட்ட காழ்ப்புனர்ச்சியினால் மனதளவிலும் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டார்.
என்றாலும் இறுதி வரைக்கும் இவை அனைத்தையும் தாங்கிக் கொன்டு பல தியாகங்களையும், சமூகம் மீதான கவலையினையும், உள்ளத்தில் சுமந்து சமூகத்திற்காக தன்னை அற்பனித்து செயற்பட்டார்.
இவ்வாறு ஊரைப் பற்றி கவலைப் பட்ட ஓர் சமூகத் தலைவனை 14-11-2021ம் திகதியன்று இறைவன் தன்னகத்தே அழைத்துக் கொண்டான்.
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்
வல்ல அல்லாஹ் அந்நாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்கத்தினை வழங்குவானாக! ஆமீன்