பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்குக் கொடுப்பனவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க தற்போதுள்ள அரசாங்கத்திடம் பணம் இருந்திருந்தால் அதனை ஒரே நேரத்தில் செய்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
@CM