Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கத் தீர்மானம்!


கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 15 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் வெளிவிவகார அமைச்சுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலின் படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இந்தியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, கென்யா, கியூபா, சீஷெல்ஸ், நேபாளம், மாலைத்தீவு, பிரித்தானியா,ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு தமது சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 


@CM

Tags

ads