Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி!


கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.


ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இரண்டு பெரிய தந்தங்களையும் மற்றும் வயதான யானை என்பது இந்த விலங்கின் சிறப்பு அம்சமாகும்.


இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை தீக தந்து ஈர்த்தது.


@CM

Tags

ads