வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியின் பிரதான வீதிக்கு அருகாக இன்று இரவு 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது குறித்த பகுதிக்கு உந்துருளியில் பிரவேசித்த சிலர் பொதுக்கூட்டத்தைப் பார்த்து கூச்சலிட்டனர்.
சற்றுநேரத்தில் குறித்த உந்துருளிகளுக்குப் க பின்னால், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத்தொடரணி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன.
இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதாக கூறபடுகின்றது.
இதன்போது ரிசாட் பதியூதீனின் வாகனத்தொடரணி தாக்கப்பட்டது.
குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தபகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் மஸ்தானின் பொதுகூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
@CM