கொழும்பு பல்கலைக்கழகம் இன்று(5) நடாத்திய பட்டமளிப்பு விழாவில் பீ.டீ.ஏ.ஹசன் அவர்கள் பொதுச்சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தில் சட்ட முதுமாணிப் (Master of Law) பட்டம் பெற்றார்.
இவர் இலங்கை ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டபின் படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் மக்கள் நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டம் (Master of Public Administration at the Postgraduate Institute of Management, University of Sri Jayawardenepura), இங்கிலாந்தின் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) சட்டமாணி சிறப்பு (LLB Hons), ஹோட்டல் முகாமைத்துவத்தில் டிப்ளமா போன்றன பெற்றுள்ளதுடன் இலங்கை சட்ட கல்லூரியின் இறுதியாண்டு கற்கையை தொடர்கின்றார்.
அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தின் தொழில்நுட்ப நிதியாளர் கழகத்தின் மூத்த உறுப்பினராகவும் (Institute of Financial Accountants) (IFA, UK) மற்றும் தொழிலாளர் மேலாண்மை நிறுவனத்தால் (Associate of Chartered Institute of Personnel Management) (CIPM) உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவர் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் உள்ளதோடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரவை உறுப்பினராகவும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டதுடன், OSEED எனும் சமூக, பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்தி அமைப்பின் இஸ்தாபக தலைவராகவும் இலங்கை சிட்டிசன் ஊடக வலையமைப்பின் ஆலோசகராகவும் தனது சமூக கடமைகளை செய்துவருகிறார்.
அவரது சாதனைகள் மற்றும் சமூக பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளதுடன், இன்றைய பட்டமளிப்பு நிகழ்வு, அவரது திறமைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
@CM