எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 220 ரூபாய் விலையில் 2 இலட்சம் கிலோ கிராம் அரிசியை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
@CM