நீண்ட காலம் சாரணியத்தில் சேவையாற்றிய வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும், உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் (ஜேபி) தேசிய சாரணர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் பிரதம சாரண ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
தகவல். எஸ். சீனீஸ்க்கான்
@CM