அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளைய தினம் ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 8 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 34 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், அதில் 18 லட்சம் பேர் மட்டுமே அதற்கு தகுதி பெற்றதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
@CM