Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை!


நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


அத்துடன், கிழக்கு, மற்றும் மாகாணங்களிலும் ஊவா மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவிலான பதிவாகக்கூடும் மழைவீழ்ச்சி அந்த என திணைக்களம் தெரிவித்துள்ளது.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தென் காற்று, மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


@CM

Tags

ads