வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டு மூன்றாம் தவணை பரீட்சைக்காக வழங்கப்படவிருந்த வினாத்தாள்களுக்கான விடைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
தரம் 6 மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த புவியியல் பாட வினாத்தாளுக்கான விடைத்தாள்களே இவ்வாறு பகிரப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் அனுராதபுரம் மாவட்டச் செயலாளர் அசேல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
@CM