Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இயற்கை இறப்பர் உற்பத்தி குறைவடைந்துள்ளதால் நாட்டில் இறப்பருக்கு பற்றாக்குறை!


இயற்கை இறப்பர் உற்பத்தி குறைவடைந்துள்ளதால் தற்போது நாட்டில் இறப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாம் எண்ணெய் போன்ற ஏனைய இலாபகரமான பயிர்களுக்கு இறப்பர் செய்கை நிலங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இறப்பர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இதன் காரணமாகஇறப்பர் தொழில்களை நம்பியிருக்கும் தொழில்களின் உற்பத்தியினை விரிவு படுத்துவதற்கும் சந்தை வாய்ப்பினை அதிகரிப்பதற்குமான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக டயர் உற்பத்தியாளர்கள், உலர் இறப்பரின் பற்றாக்குறை காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமத்தை எதிர் நோக்குவதாக தெரிவித்துள்ளனர். 


இது தவிர, டயர் மற்றும் பிற இறப்பர் சார்ந்த தொழில்துறை பணியாளர்கள் நாட்டில் இயற்கை இறப்பரின் பற்றாக்குறை காரணமாக தங்கள் உற்பத்தி தளத்தை விரிவுபடுத்த முடியாதுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். 


உள்நாட்டு இறப்பரின் விலைகள் சர்வதேச விலைகளுக்கு இணையாக இருந்தால் மட்டுமே ஏற்றுமதி விடயத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டிபோட முடியும் என, இறப்பர் கையுறை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இறப்பர் உற்பத்தியினை விரிவுபடுத்துவதற்கும் மீள் செய்வதற்கும் தேசிய நடுகை திட்டம் இல்லாததன் காரணமாக அந்நிய செலாவணியை ஈட்டும் இறப்பர் சார்ந்த தொழில்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 


@CM

Tags

ads