Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலங்கையில் சமூக பணித் தொழில்வாண்மை!


இலங்கையில் சமூக பணித் தொழில்வாண்மை


தொழில்வாண்மை சமூகப் பணி என்பது கல்வியினையும் பயிற்சியினையும் அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதாகும். இது சமூக மாற்றம், அபிவிருத்தி ,சமூக நல்லிணக்கம் போன்ற விடயங்களில் ஊக்குவிப்பதோடு சமூக பணியினுடைய மையங்களாக, சமூக நீதிக்காக மூலதர்மம், மனித உரிமை மற்றும் கூட்டணைந்த பொறுப்பு போன்றவை காணப்படுகின்றன. இது சமூக விஞ்ஞானம் மற்றும் ஏனைய விஞ்ஞானங்களை தன்னகத்தை கொண்டுள்ளதோடு பாரம்பரிய அறிவுகளுக்கும் மதிப்பளிக்கிறது. சமூகப் பணியானது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான முறைகளை வசதி படுத்திக் கொடுப்பதாகும். (IASSW 2014)

தொழில்வாண்மை சமூகப் பணியாளர்கள் என்போர் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட கல்வி மட்டங்களை பூர்த்தி செய்த அதாவது Diploma in social work, bachelor of social work, Master in social work எனும் ரீதியில் சமூகப்பணியை கற்றுத் தேர்ந்தவர்களையும், முறையான பயிற்சியை பெற்றவர்களை இவ்வாறு தொழில்வாண்மையாளர்கள் என அழைக்கின்றனர். ஒரு சேவை நாடியை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் சிறந்த தொடர்பாடல்களை மேற்கொண்டு அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களுடைய இரகசியங்களை பாதுகாப்பவரே இவ்வாறு அழைக்கப்படுகின்றார். அந்த வகையில், இலங்கையானது பல்வேறு வகையான சமூக பணி தொழில்வாண்மையாளர்களின் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

 சர்வதேச அளவில் சமூகப் பணியானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியடைந்தது. உலகளவில் காணப்பட்ட ஏழ்மை ,சமூக நீக்கம், குடியேற்றம் போன்ற பிரச்சினைகளை குறைப்பு செய்ய உருவாக்கப்பட்டது. இலங்கையில் சமூக பணியாளர் என்ற தொழிலானது ஆரம்பத்தில் அவ்வாறாக காணப்படவில்லை. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தை ஒட்டியே காணப்படுகிறது. அதாவது ,சமூகப் பணியினுடைய வளர்ச்சியானது பல்வேறு மாற்றங்களுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. இலங்கையில் சமூகப் பணியின் ஆரம்பமானது பொருளாதாரம், அடிமைத்துவம் மற்றும் மக்களுக்கு வழங்கப்படுகின்ற குன்றிய சேவைகள் போன்றவற்றுக்கு எதிராக தோற்றம் பெற்றது. இலங்கையில் முதன் முதலில் சமூகப் பணியை *"சில்வா ஜெயசூரிய"* என்னும் முன்னணி சமூக பணியாளரே அறிமுகப்படுத்தினார். பிற்பட்ட காலங்களில் அதாவது 20 ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதியில் பெண்களும் பல்வேறு பங்களிப்புகளை வழங்கினர். பிற்பட்ட காலங்களில் சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சித்தனர்.

அந்த வகையில் இலங்கையை பொறுத்தவரையில் தொழில்வாண்மையான சமூகப் பணியை பூரணமாக இரண்டு பல்கலைக்கழகமும் ஒரு உயர் கல்வி நிறுவனமும் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது ஆரம்பத்தில் 1960இல் 1 வருட கால diploma in Social Work பாடநெறியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் Bachelor Of Social Work பாடநெறியை வழங்கிக் கொண்டு வருகிறது. இதில் ஆரம்பகட்டத்தில் ஆங்கில மொழி மூலம் மட்டுமே காணப்பட்டதோடு பிற்பட்ட காலங்களில் மூன்று மொழிகளில் ஊடான கற்பித்தலும் நடைபெறுகின்றன. 

இலங்கையில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் மாத்திரமே Diploma in social work, Bachelor Of social Work ,master in social work போன்ற 03 வகையான சமூகப்பணி தொடர்பான கற்கை நெறிகளை வழங்குகிறது. பேராதனை பல்கலைக்கழகமானது முறையான ஒரு பட்டப்படிப்பை 2018 ஆம் ஆண்டு தொடக்கம் சமூகப் பணி மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூலமாக வழங்கி வருகின்றது. இங்கு MSW ஆனது கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமான கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமானது 2022 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு சமூக பணி பட்டப்படிப்பை ஆரம்பித்தது. இதில் ஆங்கில மொழி மூலமாக வழங்கப்படுகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் sociology கற்கும் மாணவர்கள் 4ம் வருடத்தில் விசேட துறையாக சமூகப் பணியை தேர்வு பாட நெறியாக தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறையில் இலங்கையில் தொழில்வாண்மை சமூகப் பணியானது கற்பிக்கப்படுகிறது.


இலங்கையில் சமூகப் பணி தொழில்வாண்மையின் முக்கிய பங்களிப்புகளாக பின்வருவனவற்றை நோக்கலாம். 1.பாதுகாப்பு மற்றும் சேவைகளை வழங்குதல்.

 பாதுகாப்பு என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான விடயம் ஒன்றாகும். அதாவது ஒரு மனிதனுக்கு அன்பு தேவையானது எவ்வளவு முக்கியமோ பாதுகாப்பு தேவையும் அதுக்கு அடுத்தபடியானதாகும். இந்த வகையில் எவர் ஒருவர் பிரச்சினை ஒன்றின் காரணமாக அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளார்களோ, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக பணியாளர்கள் தேவையான முயற்சிகளை எடுக்கின்றனர். அத்தோடு தேவைகளை இனங்காண்டு சேவை நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்க ஆயத்தமாக உள்ளதோடு அவற்றின் நடைமுறைப்படுத்த பல்வேறு சேவைகளையும் வழங்குகின்றனர். உதாரணமாக குறிப்பிடுவதாயின், இயற்கையான அனர்த்தத்தின் மூலம் தன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பெற்றுக் கொடுப்பதோடு அப்பிள்ளைகளியன் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தேவைகள் சுகாதாரம் போன்ற முக்கியமான விடயங்களுக்கு தேவையான வசதிகளையும் பெற்றுக் கொடுக்க முயல்கின்றனர்.


2. பொருளாதாரத்தின் ஊடக பங்களிப்புகள் குறிபிட்ட சமூகத்தில் உள்ள மக்களுக்கு அதாவது விஷேட தேவை உடையவர்கள், வறுமைப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உதாரணமாக குறிப்பிடுவதாயின், இலங்கை நடைமுறைப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற சமூக நலன்புரி சேவைகளான, சமூர்த்தி, அஸ்வெசும, முதியோர் கொடுப்பனவு போன்ற திட்டங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் சேவைகளை பெற்றுக் கொடுக்க சமூகப் பணி தொழில்வாண்மையானது முக்கியமானது ஒன்றாக காணப்படுகிறது.

3. தொழில் வாய்ப்புகளில் ஏற்பற்ற பங்களிப்புகள் இலங்கைப் பொருத்த அளவில் diploma in social work, bacholar in social work, master in social work போன்ற பட்டப் படிப்புகளை வழங்குவதினால் இலங்கையில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் ஒரு சிறந்த தொழிலை ஈட்டி கொள்ள கூடியதாக உள்ளது தொழில்வாண்மை சமூகப் பணியானது உளவியலாளர் சமூக பணியாளர் மற்றும் மனித வள முகாமையாளர் போன்ற துறைகளில் ஊடகப் பிரவேசித்துள்ளையால் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தன்மையொன்று காணப்படுவதோடு சிறந்த தொழிலில் ஈட்டக்கூடியதாகவும் காணப்படுகிறது.

4.மனித நேயம் மற்றும் பொதுநலனின் ஊடான பங்களிப்பு

 சமூக பணி என்பது சமுதாயத்தில் உள்ள ஒற்றுமையை மேம்படுத்துகின்ற வகையில் செயல்படுகின்ற ஒன்றாகும். அதாவது இது மக்களினுடைய சுயநலங்களை குறைப்பதோடு சமூகத்தில் உள்ள தேவை உடையவர்கள், வறுமைப்பட்டவர்களுக்கான சேவைகளை வழங்குவதில் அவர்களை ஈடுபட வைக்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. அதாவது சமூக வளர்ச்சி ஒன்று ஏற்படும் வேண்டுமாயின் வறுமைத்தன்மை என்பது குறைய வேண்டும் .ஆகவே இது மனித நேயம் மற்றும் பொதுநலன் போன்ற விடயங்கள் விடுபட வைத்து சமூக வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை அளிக்கிறது.

5. சிறுவர் மற்றும் இளம்பெண்கள் ஆரோக்கியம் 

18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்பதினாலும் 12 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி அவசியம் என்பதையும் கொண்டு சிறுவர்களின் நலன்கள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது அவர்களது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் திறன் போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அத்தோடு பெண்களின் உரிமைகள் அவர்களது தேவைகள் சுதந்திரம் தொடர்பான விடயங்களின் கவனம் செலுத்துவதோடு அவற்றின் மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். 

 

இவை தவிரந்தும் இன்னும் சில பங்களிப்புகளையும் வழங்குகின்றது.


தொழிவாண்மை சமூகப் பணியானது இலங்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளதோடு உளவியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தொழில்வாண்மை சமூக பணியாளர்களின் முறையான பயிற்சிகளை பெற்றுக் கொண்டு செயல்படுவதனால் அவர்களால் வினைத்திறனான சேவைகளை வழங்க முடியும். மேலும் இது மக்கள் நலன் சமூக பாதுகாப்பு மக்களின் அபிவிருத்தியில் மாற்றங்களை ஏற்பட முயற்சிப்பதனாலும் இவர்கள் பல்வேறு துறைகளின் ஊடக மக்களின் வாழ்க்கை நிலையும் மேம்படுத்த வசதிபடுத்துவதோடு அவர்களின் உரிமைக்காகவும் முறையான நடவடிக்கை எடுப்பதனாலும்,சமூகத்தின் பல மட்டங்களிள் தங்களது இடையீடுகளை செய்வதனாலும் இலங்கையில் தொழில்வாண்மை சமூகப்பணியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.



T.முஹமட் அர்ஷின்

      -நிந்தவூர்-


சமூகப்பணி இளங்கலை (சிறப்பு)பட்டப்படிப்பு,

1ம் வருட மாணவன்,

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.

ads