Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

குவைத்தில் விசா சட்டம் இன்று முதல் அமுல்; குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினருக்கான புதுப்பிக்கப்பட்ட விசா விதி மீறல்களுக்கு கடுமையான அபராதம்!


குவைத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் இன்று முதல் நடைமுறையில்; மீறுபவர்கள் கடுமையான அபராதங்களை செலுத்த வேண்டும்!


புதிய சட்டத்தின் வெளிநாட்டினருக்கான Article 6, 9, 11, 12 மற்றும் 13 ஆகிய பிரிவுகள் குறித்து வெளிநாட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆறு தசாப்த கால பழக்கமுடைய குடியுரிமைச் சட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் திருத்தம் இன்று(05/01/25) ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. கடந்த மாத தொடக்கத்தில் இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்தது. விதிமீறல்களுக்கான அபராதம் 600 தினாரில் இருந்து 2000 தினார்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


Article 6


புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பதிவு செய்யாதமுதல் 4 மாத கால அவகாசத்திற்குப் பிறகு தவறினால், அதற்குப் பிறகு முதல் மாதத்திற்கு 2 தினார் அபராதம் விதிக்கப்படும். அடுத்த மாதங்களில் அபராதம் 4 தினார்களாக இருக்கும். அதிகபட்ச அபராதம் 2,000 தினார்.


Article 9


குடியிருப்பு விசாவைப் பெற்று, நாட்டிற்குள் நுழைந்த பிறகு, ஆவணங்களை சட்டப்பூர்வமாக்குவதில் தாமதம் ஏற்பட்டால் முதல் மாதத்திற்கு 2 தினார்களும் அதன்பின் ஒவ்வொரு நாளுக்கும் 4 தினார்களும் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்ச அபராதம் 1200 தினார்.


இது பின்வரும் பிரிவுகளை சேர்ந்த குவைத்தில் தங்கியுள்ள குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும்: 

குடும்பத்தைச் சார்ந்து விசா வைத்திருப்பவர்கள், பள்ளி சார்ந்த விசா வைத்திருக்கிற நபர்கள், அரசு வேலை தேடுபவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வணிக மற்றும் தொழில்துறை ஊழியர்கள், மருத்துவ விசிட் விசா நபர்கள் மற்றும் தற்காலிக அரசாங்க ஒப்பந்ததாரர்கள். அதேபோல், Article9-ன் கீழ் வரும் வீட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைமுறைகளை முடிக்கவில்லை என்றால் ஒரு நாளைக்கு இரண்டு தினார் அபராதம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான அதிகபட்ச அபராதம் 600 ஆகும்.


Article 11

விசிட் விசாக்களில் வந்து காலாவதி கடந்தும் தங்கியிருப்பவர்கள்-அரசாங்க சேவைகளின் ஒரு பகுதியான விசிட் விசாக்கள், தனியார் விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா விசா, வணிகம் சம்மந்தப்பட்ட விசிட் , டிரான்ஸிட்டு விசாக்களின் காலாவதி கடந்தும் தங்குதல், குடும்ப விசிட் விசாக்களில் காலவதி கடந்து தங்குதல், பேருந்து மற்றும் டிரக் ஓட்டுநர் அனுமதி காலாவதி கடந்தும் தங்குதல், விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை சார்ந்த ஆகியவற்றின் காலாவதி கடந்தும் தங்குதல் ஆகியவை அடங்கும். இந்த வகை நபர்களுக்கு அபராதம் அதிகம். விசா காலாவதி முடிந்த அடுத்த நாளிலிருந்து 10 தினார். அதிகபட்சமாக 2000 தினார்கள் வரையில் அபராதம் கட்ட வேண்டும்.


Article 12


தற்காலிக குடியிருப்பு விசா காலாவதியான நபர்களுக்கு முதல் மாதத்திற்கு இரண்டு தினார் மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் நான்கு தினார். அதிகபட்சமாக 1200 தினார்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 Article 13


விசாவை புதுப்பிக்காதவர்கள். முதல் மாதத்திற்கு இரண்டு தினார் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் நான்கு தினார் அபராதம். அதிகபட்சமாக 1200 தினார்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தலைமறைவான வழக்குகள்:


புகார் கிடைத்த உடன் விசா ரத்து செய்யப்படும். அவர்கள் பின்னர் நாட்டில் தங்க விரும்பினால், அவர்கள் புதிய குடியிருப்பு அனுமதி பெற வேண்டும். இதுபோன்ற வழக்குகளுக்கு முதல் மாதத்திற்கு இரண்டு தினார்களும் அதன் பின் ஒவ்வொரு நாளும் நான்கு தினார்களும் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 1200 தினார்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


(Arabtamildaily Team)


@CM

Tags

ads