இந்தியாவின் சர்வதேச கைவினைப் பொருட்காட்சி – 2025; இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 சிறப்பு கலைஞர்கள் இன்று இந்தியா புறப்படுகின்றனர்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள "சர்வதேச கைவினைப் பொருட்காட்சி – 2025" (International Craft Mela Exhibition 2025) நாளை (07.02.2025) முதல் தொடங்கவுள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 20 கலைஞர்கள் இன்று (06.02.2025) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி நோக்கி புறப்படுகின்றனர்.
இந்தக் கண்காட்சி பிப்ரவரி 7 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இலங்கைச் சார்பில் பல்வேறு கைவினைப் பொருட்கள், பாரம்பரிய கலாச்சாரம், மற்றும் சிற்பக் கலைகளை உலகளவில் வெளிப்படுத்துவதற்காக இந்தக் குழு பங்கேற்கிறது.
இம்முறை தெரிவாகிய கலைஞர்களில், நிந்தாவூரைச் சேர்ந்த திரு. அப்துல் அஜீஸ் முகம்மது நாஷிஃப் என்பவரும் இடம்பிடித்துள்ளார்.
இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவி விரிவுரையாளர் மற்றும் தற்போது QIB கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
இந்தியாவில் நடைபெறும் இந்த முக்கிய கண்காட்சி, இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை உலகளவில் பிரபலப்படுத்துவதற்கும், புதிய சந்தைகளை கண்டுபிடிப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@CM