மட்டக்களப்பில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரச நியமனங்களைக் கோரி அவர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்கோரும் பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களின் நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
@CM