தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளன.
இதற்கான நிகழ்ச்சி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, தாதியர் சேவையில் 79 விசேட தர உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும், என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
@CM