Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முட்டையை கழுவிய பின் சேமிப்பது ஆபத்தா?


வீடுகளில் முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


முட்டைகளைக் கழுவுவது முட்டைகளின் மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க சுட்டிக்காட்டுகிறார்.


முட்டை ஓடு முழுமையாக மூடப்படவில்லை. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


முட்டையின் உள்ளே புரதம் நிறைந்த ஒரு ஊடகம் உள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.


கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லையெனவும் முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான மேலாண்மை முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads