தரமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது நீண்டகால சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் தயாரிப்புகளைத் தொடர்ந்து நீண்டகாலமாகப் பயன்படுத்துவதானது, பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதுகாப்பான உணவு விநியோகம் மற்றும் கையாளுதல் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே சுகாதார அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
@CM
