அஸ்வெசும ஜூலை மாதத்திற்குரிய நலன்புரி முதியோர் கொடுப்பனவு இன்று (31) எழுபது வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக முந்நூற்றுப் பத்து கோடியே எண்பத்தொரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக முப்பத்தெட்டு கோடியே அறுபத்தாறு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
இதற்கிணங்க இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே நாற்பத்தெட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் தமக்கான முதியோர் கொடுப்பனவை தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.
@CM
