Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு!


'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆகஸ்ட் மாத கொடுப்பனவுகள் இன்று (3) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இதன்படி முதல் கட்டத்தில் 618,352 பேருக்கு 309 கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையும் (ரூ. 3,091,760,000.00), இரண்டாம் கட்டத்தில் 78,260 பேருக்கு 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையும் (ரூ. 391,300,000.00) வழங்கப்படவுள்ளன.


பயனாளிகள் இன்று (3) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads