க. பொ.த உயர் தர பரீட்சை 2022(2023) இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2023.09.11 ஆம் திகதி அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர். ஜனாப். A. ABDUL GAFOOR அவர்களின் தலைமையில் எமது பாடசாலையின் காசிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) Mr. MHM. JAFEER அவர்களும் கல்முனை கல்வி வலயத்தின் சமாதான கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் Mr. AM. RAZEEN அவர்களும், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் MR.M.SHERIFUDEEN அவர்களும் ,பாடசாலையின் முகாமைத்துவ குழு உறுப்பினர்களும், பகுதித் தலைவர்களும்பாட ஆசிரிய ஆசிரியைகளும், பாடசாலையின் SDEC உறுப்பினர்கள், பழைய மாணவர் உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரிய ஆசிரியைகளும் , பாடசாலையின் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பிரதம அதியினாலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிபரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மென்மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள அனைத்து மாணவர்களுக்கும் Citizen Media சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.