Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி கட்டியணைத்து புகைப்படம் எடுத்த ஜனாதிபதி

 



வடக்குக்கு நான்கு நாள் பயணமாக   வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார். 

இந்நிலையில்   யாழில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் 

இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தை கில்மிஷா உதயசீலன் சூட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ads