மொடல் அழகி (திவ்யா பஹுஜா) கொடூரமாக கொலை! கொலையுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் அடையாளம்!
மொடல் அழகி ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்திய மொடல் அழகியான திவ்யா பஹுஜா என்ற இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குர்கானில் உள்ள விருந்தகம் ஒன்றில் கொலை நடந்ததாகவும், இன்னும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் விருந்தகத்துக்குள் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை வெளியே எடுத்துச் சென்று குழுவினரின் செயற்பாடுகள் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.