Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தடை நீக்கத்தின் பின் மீண்டும் தலைவரானார் டேவிட் வார்னர்!


பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியின் தலைவராக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தென்னாபிரிக்காவுடன் கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தியதற்காக வார்னருக்கு ஓராண்டு விளையாடத் தடையும், அணித் தலைவராகச் செயற்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியன்று கூடிய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் அதிகாரிகள் குழு, தடையை நீக்குவதற்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் வார்னர் பூர்த்தி செய்துள்ளார் என்று தீர்மானித்தது. 


இதனையடுத்து, வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தலைமைத் தடை, உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


@CM

ads