Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலத்திரனியல் விசா குறித்து மேலும் ஆய்வு!


இலத்திரனியல் விசா முறை மூலம் தென்கொரியாவிற்கு பணியாளர்களை அனுப்புவது குறித்து மேலும் ஆய்வு செய்யவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.


எவ்வாறாயினும், இலத்திரனியல் விசா முறையின் மூலம் பணிக்காக கொரியா செல்வதற்கு வீசா மறுக்கப்பட்ட குழுவொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியாகதிற்க்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. 


இதன்போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன்,கட்டுப்பாட்டுக்குள் அதனைக் காவல்துறையினர் கொண்டுவந்துள்ளனர். 


இவ்வாறான பின்னணியில், குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 


@CM

Tags

ads