Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கோழி இறைச்சிக்கான் கேள்வி அதிகரிப்பு!


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு அதிக தேவை ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதன் மூலம் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


எனினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் விலையை அதிகரிப்பதற்காகக் கோழி இறைச்சியைக் குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads