Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

மாணவர்களின் கல்வி தொடர்பில் பிரதமர் வழங்கிய உறுதிமொழி!


எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகதன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் இன்று (20) தனது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.


மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். 


தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


@CM

Tags

ads