ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணய போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைதானவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்றைய தினம் கடுவலை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதானவர் 38 வயதான கடுவலை கொரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM