கல்முனை கல்வி வலயத்தின் வரலாறு பாட ஆசிரிய ஆலோசகராக சிரேஸ்ட ஆசிரியர் I. M மௌஸூர் (SLTS-1) அவர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாறு பாட ஆசிரிய ஆலோசகருக்கான வெற்றிடத்தினை நிரப்பும் முகமாக நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றதை அடுத்து 2024.11.18 ஆந் திகதி செயற்படும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்க்கான உத்தியோக பூர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய எம். எஸ். சஹுதுல் நஜீம் சேர் அவர்களது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி M.H.றியாசா அவர்களும் திருமதி அஸ்மா மலீக் அவர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியரான I.M. மௌஸூர் நிந்தவூர் கமு/அல்-மினா வித், மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்றப் வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லூரி, நிந்தவூர் கமு/அறபா வித்தியாலயம் என்பவற்றில் வரலாறு பாட அடைவுக்கு முக்கிய பங்களிப்பு செய்தவராவார்.
பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான இவர் M.A (Sociology) முதுகலை மானி, மனித உரிமைகள் கற்கை, உளவளத்துறை ஆகியவற்றையும் பூர்த்தி செய்ததுடன். ஆரம்ப காலத்தில் சமூர்த்தி முகாமையாளராகவும் அரச சார்பற்ற நிறுவனங்களில்ல நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவங்களையும் பெற்றவருமாவார்.
இறுதியாக இடம் பெற்ற G.C.E.(O/L)-2023 பரீட்சையில் வரலாறு பாடத்தில் 100% சித்தியை பெற்றுக் கொடுத்ததுடன் கமு/அறபா வித்தியாலயம் 100% சித்தி பெறுவதற்கும் அர்ப்பணிப்பு சேவைபுரிந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
@CM