இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் ( Chartered Institute of Sri Lanka) பொது நிதி மற்றும் கணக்கியல் துறையின் வருடார்ந்த பொதுக் கூட்டமானது இன்று (2025.04.01) கொழும்பில், இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு நிகழ்வில் ஐக்கிய இராச்சிய பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் அங்கத்தவராக (CIPFA UK) நியமனத்தினைப் பெற்றுக் கொண்டார். இந்நியமனமானது சர்வதேச ரீதியான பொது நிதி மற்றும் கணக்கியலில் அங்கத்துவம் கிடைத்திருப்பது விஷேட அம்சமாகும். இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 16 அங்கத்தவர்கள் மாத்திரம் இந்த உயர் தகைமை கொண்ட பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் (Higher and Premier Professional Institute of Accountants of Sri Lanka) அங்கத்துவம் வழங்கியுள்ளது.
கணக்காளர் ஹாறூன் அவர்கள் பொருளியலில் சிறப்பு முதுமானிப் பட்டம், வியாபார நிர்வாகத்தில் இளமானிப்பட்டம், கணக்கியலில் உயர் தேசிய டிப்ளோமா பட்டம் மற்றும் கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர் பட்டம், அரச பொது நிதியில் டிப்ளோமா பட்டம் என பல துறைகளில் பட்டங்களினைப் பெற்றிருப்பதுடன், தொழில் ரீதியாக சுமார் 23 வருடங்களுக்கு மேல் அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் ரீதியான அனுபவங்களினையும் கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே, இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தில் பொது நிதி மற்றும் கணக்கியல் துறையில் அங்கத்தவராகவும் (APFA SL) , 20 வருடங்களாக இலங்கை கணக்கீட்டு தொழிநுட்டபவியலாளர் நிறுவகத்தில் அங்கத்தவராகவும் சேவையாற்றுகிறார்.
இலங்கை கணக்காளர் சேவையில் கடமையாற்றும் இவர், லாகுகல பிரதேச செயலத்தின் நீண்ட காலமாக கணக்காளராகவும், பொத்துவில் பிரதேசத்தின் பதில் கணக்காளராகவும் இன, மத பேதமற்று அனைவருடனும் நல்ல முறையில் பழகுவதுடன், சிறந்த நன்மதிப்பினையும் பெற்று சிறப்பாக சேவையாற்றுகிறார்.
கணக்காளர் ஹாறூன் அவர்கள் தேசிய ரீதியான அரச கணக்காளர் சேவைச் சங்கத்தின் இணைத் தலைவராகவும் மற்றும் பல சமூக, ஏனைய அமைப்புக்களில் பல உயர் பதவிகளில் சேவையாற்றுவதும் விஷேட அம்சமாகும்.
@CM