செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித் தொகை நாளை மறுதினம் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
11,201,647,000 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அஸ்வெசும உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
@CM