Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - புதிய சுற்றறிக்கை வெளியீடு!


அரசாங்க நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண (நாட் சம்பளம்), மாற்று, ஒப்பந்த அல்லது சலுகை அடிப்படையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.


பொதுத்துறை ஊழியர்களின் நீண்டகால வேலைவாய்ப்பு ஸ்திரத்தன்மை மற்றும் அவர்களின் நிலை குறித்த கவலைகளுக்கு இந்த நடவடிக்கை தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தகுதி வாய்ந்த ஊழியர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்துவதையும், பொதுத்துறையில் அதிக வேலை பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்த சுற்றறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பல்வேறு அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தும்.


சேவைக் காலம், செயற்திறன் மதிப்பீடுகள் மற்றும் அந்தந்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தகுதிவாய்ந்த பணியாளர்களைக் கண்டறிந்து, நிரந்தர நியமனங்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


@CM

Tags

ads