Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!


நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


@CM

Tags

ads