இந்த ஆண்டின் ஏப்ரல் மாத இறுதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 178,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வாகன இறக்குமதி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த இறக்குமதித் தொகையினுள் உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், வெளிவாரிச் சூழல்களைக் கருத்திற் கொண்டு, வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுங்கத் தீர்வை மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
@CM
