2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகேவினால் இது தொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2027 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) 2027 ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
மேலும், பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சை (GIT) 2027 ஒக்டோபர் 24 ஆம் திகதியும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திகதிகளைக் கவனத்தில் கொண்டு, பரீட்சைகளுக்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு பெற்றோர் மற்றும் பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
@CM
