நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையினால் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான புதிய கட்டணக் கட்டமைப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக மின்கல சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவோட் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடங்கலற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மறுசீரமைக்கக்கூடிய சக்தி மூலங்களின் இணைப்பை விரிவுபடுத்துவதுடன், போதுமான சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
@CM
