Type Here to Get Search Results !
Developed by Cleverbit

No title













இலங்கையில் பிறப்பு முதல் 19 வயது வரையிலான சிறுவர்களில், ஆண்டுதோறும் 900 முதல் 1,000 வரையான புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு பதிவாகும் சிறுவர்களிடையே லுகேமியா, நிணநீர் சுரப்பி தொடர்பான புற்றுநோய், மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் தொடர்பான புற்றுநோய் ஆகியவை அதிகளவில் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


@CM

ads