Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!


நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


 @CM

Tags

ads