அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும முதற்கட்டத் திட்டத்தின் கீழ் 992,053 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தம் 9.18 பில்லியன் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறும் 213,335 குடும்பங்களுக்கு மொத்தம் 2.12 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, பயனாளிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலங்கெதர தெரிவித்துள்ளார்.
@CM
