Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் வாகனம் கல்முனையில் விபத்துக்குள்ளானது




                      - ஏ. ஷபாஅத் அஹமட் -


சற்று நேரத்திற்கு முன்னர் நிந்தவூரைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நிந்தவூரை நோக்கிச் சென்றிருந்த வாகனம் கல்முனையில் வைத்து விபத்தில் சிக்கியது.


இச்சம்பவம் கல்முனை பிரதான வீதியில் "அல்தாப்f ஹோட்டலுக்கு" முன்பாக நடுவீதியில் அமைக்கப்பட்டிருந்த பூச்சாடியுடனான தடுப்பொன்றில் மோதுண்டபோது நடைபெற்றது.


வாகனத்தின் முன்பகுதி பெருமளவில் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அவர்கள் வேறு ஒர் வாகனத்தின்மூலம் நிந்தவூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.


மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று திரும்பியவேளையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags

ads