Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!


வட மாகாணத்தில் இன்று (02) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.


புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் மணித்தியாலத்திற்கு பிராந்தியங்களில் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் ன வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads