Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில், நாடளாவிய ரீதியில் 478,182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 


இவர்களில், 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


@CM

ads