Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையில் டிஜிட்டல் புரட்சி: மே 1 முதல் அமுலுக்கு வரும் "டிஜிட்டல் காப்பீட்டு அட்டை"


இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.


இந்த முயற்சி, தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், பொது மக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக இது அறிமுகப்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் துணைபுரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.


@CM

Tags

ads