Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மின்சார நெருக்கடிக்கு முடிவு? நாட்டை வந்தடைந்தது எரிபொருள்!


மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.


அதன்படி 30 ஆயிரம் மெட்ரிக் டன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


குறித்த கப்பல் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்ததுடன் அதிலுள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


@CM

Tags

ads